Posts

Showing posts from April 7, 2020

உண்மையை இடைக்கச்சையாக் கட்டிக் கொள்வோம்

உண்மையை இடைக்கச்சையாக்   கட்டிக் கொள்வோம்           நார்ப்பட்டுக் கச்சை ஒன்றை வாங்கிக் கொள்ள இறைவாக்கினர் எரேமியாவை ஆண்டவர் அழைக்கின்றார் . பின்னர் அதனை ஆற்றில் உள்ள பாறையில் ஒளித்து வைக்கச் சொல்கிறார் . பின்னர் அதை எடுத்துப் பார்க்கும்போது அது இற்றுப் போயிருக்கின்றது . ( எரே 13:1-11)           போலித்தனம் , உண்மை அற்ற நிலை , இறை திட்டத்திற்குச் கீழ்ப்படிந்து அதன்படி நடவாமல் இருத்தல் எல்லாம் பாறையாக மாறி உண்மை அதில் மறைந்து நைந்து போய் விடுகிறது . எனவே தூய ஆவியானவர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடினாலும் உண்மை இல்லாததால் கச்சை ஆண்டவரோடு ஒன்றித்திருப்பது போல் நம்மால் ஆண்டவரோடு இணைந்து இருக்க முடியவில்லை . ஏனென்றால் துணையாளாராம் தூய ஆவியானவர் உண்மையின் ஆவியானவர் ( யோ 14 : 17) அவர் நமக்காகப் பரிந்து பேசிச் செபிப்பார் . நம்மிடம் உண்மை இல்லையெனில் நாம் வேண்டுவதை எவ்வாறு பெற முடியும் ? பொய்யாம் அலகை :-         ...

நமது வாழ்க்கைச் சூழலில் நடக்கும் நிகழ்வு

நமது வாழ்க்கைச் சூழலில் நடக்கும் நிகழ்வு                     இந்த நிகழ்வையொத்த ஒரு நிகழ்வு புனித தோமாவின் வாழ்க்கையில் நடக்கிறது . இயேசு இறந்தவுடன் இயேசுவின் சிலுவை மரணம் , சீடர்களின் நம்பிக்கையை குலைக்கிறது . ஏனென்றால் , இயேசுவின் மரணம் அரசியல் , மதம் சார்ந்த சூழ்ச்சியாலும் , பொறாமையாலும் நடைபெற்றது . சமூகத்தில் உயர் மட்டத்தில் இருந்த குருக்களையும் , அரசியல் தலைவர்களையும் எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும் என்று சீடர்கள் பயந்து ஒரு அறையிலே கதவை மூடி ஒளிந்து இருக்கிறார்கள் . இயேசுவின் கொள்கைகளையும் , வழிமுறைகளையும் கைவிட்டுவிட்டு யூத குருக்களின் வழியில் செல்ல அவர்கள் மனம் ஒப்பவில்லை . தைரியமாக இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றவும் முடியவில்லை . அந்த நேரத்தில் நல்லாயனாம் இயேசு தன் ஆடுகளைப் பார்க்க அறையினுள் ஊடுருவி அவர்கள் நடுவே தோன்றுகிறார் . நம்பிக்கையை ஊட்டுகிறார் . அன்று தோமா அங்கு இல்லை நம்ப மறுக்கிறார் . தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருந்தாலும் ஒரு ஆட்டைத் தேடி அலைபவர...