Posts

Showing posts from June 26, 2020

நிறைவை நோக்கி

நிறைவை நோக்கி           நமது வானகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் . ( மத் 5:48 ) நிறைவின்மையாலே நமது ஆதி பெற்றோர் பாவம் செய்தனர் . அவர்களது மனநிறைவு இல்லாத தன்மையே ஆண்டவருடைய அன்பின் வளத்தைச் சுவைக்கத் தடையாக இருந்தது . அவர்களது நிறைவின்மை அவர்களுக்கு அச்சத்தைத் தோற்றுவித்தது . இந்த வளமையானத் தோட்டம் என்றுமே நமக்கு அளிக்கப்படுமா ? அல்லது நாம் விரட்டப்படுவோமோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது . இந்த அச்சத்தைப் பயன்படுத்திக் கொண்ட அலகை , பாம்பு வடிவில் வந்து அவர்களை பாவம் செய்யத் தூண்டியது . நாம் கடவுளைப் போல் ஆக வேண்டும் என்ற பேராசை எழுந்தது . எனவே மனநிறைவின்மை பயத்தையும் , பேராசையையும் தூண்டி , முதல் மனிதனைப் பாவத்திற்கு அடிமைப்படுத்தியது . காயினின் நிறைவின்மை :           நமது ஆதிப்பெற்றோரிடம் இருந்த மன நிறைவின்மை , அவர்களுக்குப் பிறந்த காயினிடமும் தொடர்கிறது . அவன் கடவுளுக்கு அளித்த காணிக்கைகள் முதற்கனிகளாக இல்லை . மனநிறைவோடு மகி...

நீர் மட்டும் எனக்குப் போதும்

நீர் மட்டும் எனக்குப் போதும்           ஆதியிலே கடவுள் உண்ண வேண்டாம் என்ற கனியை மனிதன் உண்டான் . கடவுளின் அறிவுரையை மீறியதால் நிலைவாழ்வின் கனியை இழந்தார்கள் . அவர்கள் கண்கள் திறக்கப்படுகின்றன . நன்மை , தீமை அறிபவர்கள் ஆனார்கள் . இதற்கு முன் தீமை அவர்கள் வாழ்வில் இல்லை . அலகை நுழைந்ததால் திறக்கப்பட்ட கண்கள் இவ்வுலக நாட்டங்களை நாடின . ஆடையை நாடுகிறார்கள் ( தொ . நூ 3:7 ) வானதூதர்களைப் போன்று இருந்தவர்களிடம் அலகை வாயிலாக , கீழ்ப்படிதலின்மையின் மூலம் இச்சை நுழைகிறது . கண்களை திறக்கும் நற்கருணை :           எம்மாவுஸ் நோக்கிச் செல்லும் சீடர்கள் இயேசுவின் மரணத்தைப் பற்றி வேதனையோடு பேசிக்கொண்டு செல்கிறார்கள் . அவர்கள் இதயத்தில் இயேசுவை நோக்கியத் தேடல் , தாகம் வேரூன்றி நிற்கிறது . அப்போது இயேசு அவர்களோடு இணைந்து சென்று மெசியா பாடுபட்டு மரித்தால் தான் உயிர்த்தெழுந்து மகிமை பெறுவார் என்று உணர்த்தி அப்பத்தைப் பிட்டு பகிர்ந்தளிக்கும் போது அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன . வேதனையிலும் , ப...