Posts

Showing posts from May 31, 2020

கடவுள் அன்பாய் இருக்கிறார்

கடவுள் அன்பாய் இருக்கிறார்           இறைவன் நம்மைத் தமது சாயலாகப் படைத்தார் . இறைவன் அன்பாய் இருக்கிறார் . ( 1 யோவா 4:16 ) எனவே அவரது சாயலாகப் படைக்கப்பட்ட நம்முள் நிரம்பி இருக்க வேண்டியது அன்பு . எனவே மனித வாழ்க்கை இறைவன் விரும்பியபடி அமைய அடிப்படைத் தேவை‌ அன்புப் பரிமாற்றமே . மரியின் வழி அன்பு வழி :           அன்னை மரியைப் போன்றே ஏவாளும் ஜென்மப் பாவமில்லாமல் பிறந்திருந்தாலும் ஏவாளின் சுயநலம் அவளது வழித்தோன்றல்களை பாவத்திற்கு அடிமையாக்குகிறது . மன மகிழ்ச்சியோடு தோட்டத்திலே வாழ்ந்திருந்தாலும் இறைவனைப் போன்று மாற வேண்டும் எனும் சுயநலம் மனுக்குலத்தையே அழிவுக்கு இட்டுச் செல்கிறது .           அன்னை மரியாவுக்கோ , அவரது அழைப்பு மனுக்குலத்தை மீட்கும் மகனைப் பெற்றெடுக்கும் கடமை . அதுவும் கன்னிப்பருவத்தில் . ஆனால் இறைவன் மீதும் உலக மக்கள் மீதும் கொண்ட அன்பு கனன்று எரிந்து கொண்டிருந்தாள் இறைவனின் தூய்மை அவருள் குடிகொள்கிறது . எனவே உயி...

சுயநலம் மறந்து பிறர்நலம் பேணுவோம்

சுயநலம் மறந்து பிறர்நலம் பேணுவோம் இறைத் திட்டத்திற்கு அர்ப்பணித்தல் :           அன்னை மரியாவை உலக மக்கள் அனைவருக்கும் தாயாக இறைமகன் இயேசு அளித்தார் . அன்னை மரியா இறைமகன் இயேசுவைத் தன் உதரத்தில் தாங்கிய நேரத்தில் தன்னை இறைவனின் அடிமையாகத் தாழ்த்திக் கொண்டார் . அன்று முதல் , இயேசுவின் சிலுவையின் அடியில் நின்றது , அதன் பின்னர் சீடர்களை இணைத்து செபித்தது வரை ' இறை விருப்பத்தின்படி நடத்தல் ' என்பதை வாழ்வின் நெறியாக அன்னை மரியா கொண்டிருந்தார் . எங்கும் இயேசுவின் தாய் என்று தன்னை முதன்மைப்படுத்தாது இறைத்திட்டத்திற்குத் தன்னை அர்ப்பணித்து வந்தார் . எல்லா வேதனைகளையும் , வியாகுலங்களையும் எண்ணிப் புலம்பாமல் தன் இருதயத்தில் , இருத்திச் சிந்தித்து வந்தார் . ( லூக் 2:52 ) இறைத்திருவுளத்தைப் புரிந்து கொண்டு இறைவனோடு இணைந்து வாழ்ந்தார் . இறைவனின் மீட்புத் திட்டத்தில் அவரது பங்கு அளப்பரியது . எனவே துணையாளராம் தூய ஆவியை நமக்கு அருளிய இறைமகன் அவரது தாயின் பரிந்துரை நமக்குத் தேவை என்று உணர்ந்து தமது தாயை நமக்குத் தாயாக அளிக்க...