Posts

Showing posts from May 17, 2020

மரபுரிமைச் சொத்துடன் ஞானமும் சேர்ந்து அளிக்கப்படும்

மரபுரிமைச் சொத்துடன் ஞானமும் சேர்ந்து அளிக்கப்படும்           பெற்றோரின் சொத்துரிமை பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது . நமது பாரம்பரியத்தில் வீட்டின் தலைமகனுக்கு இவ்வுரிமை அதிகமாக வழங்கப்படுகிறது . மூத்தமகன் சகோதர , சகோதரிகளையும் , வயதானவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பையும் பெறுகிறார் . இவ்வாறு கடமை தவறாமல் பொறுப்பு உணர்ந்து செயல்படும் மூத்த மகனின் அனுபவ அறிவு அதிகரிக்கின்றது . உண்மையாக , முழு மனதுடன் , பெற்றோரின் விருப்பத்தின்படி நடக்கும் மூத்த மகன் ஞானம் மிக்கவராய் எல்லாரோலும் புகழப்படுகிறார் . இவ்வாறே விண்ணகமாம் நம் தாய்நாட்டை அடைய இறைவனது விருப்பப்படி நாம் நடக்க வேண்டும் . எனது எண்ணங்கள் உனது எண்ணங்கள் அல்ல :           இறையன்பும் , பிறரன்பும் நிறைந்து நம்மில் வழியும் போதுதான் இறை விருப்பத்தின்படி நடக்க முடியும் . நம்மை அன்பு செய்யாதவர்களையும் அன்பு செய்ய வேண்டுமென்பதே இறைவனின் விருப்பம் . ( மத் 5:44 ) ஏனென்றால் இறைவனின் எண்ணங்கள் நமது எண்ணங்கள் அல்ல . ( எசா 55:8 )...

நம் கடவுளாகிய ஆண்டவர் தூயவர்

நம் கடவுளாகிய ஆண்டவர் தூயவர்           நம்மைப் படைத்த நமது இறைவன் தூயவர் எனவே அவரது சாயலான நாமும் தூய்மையாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் . ( லேவி 19 :2 )   நமது தூய்மையை நம்மிடமிருந்து அகற்றி நம்மைக் கறைப் படுத்துவது நமது பாவங்கள் ஆகும் . இறைமகன் இயேசு தம் இரத்தத்தால் நம்மைக் கழுவி பாவக்கறையில் இருந்து நம்மை விடுவித்து தூய்மைப் படுத்துகிறார் . ( எபே 1 :7 ) ஆதிப்பெற்றோரின் ஆணவத்தை வென்ற தாழ்ச்சி :           பாவத்தின் பிடியில் மனித குலம் சிக்குவதற்கு ஆதிப்பெற்றோரின் ஆணவம் காரணமாக இருந்தது . ஆனால் நமது இறைமகனின் தாழ்ச்சி , தந்தையின் திரு விருப்பத்திற்கு கீழ்படிதல் , தந்தையின் மீதும் மனுக்குலத்தின் மீதும் வைத்திருந்த அளவற்ற அன்பு மனுக்குலத்திற்காக சிலுவை மரணம் ஏற்கச் செய்தது . அன்னை மரியா அமல உற்பவமாகப் பிறந்து பாவம் அறியாதவராக வாழ்ந்தார் . அவரது தூய்மைக்குக் காரணம் அவரது இறை அன்பும் , பிறர் அன்பும் தாழ்ச்சியுமே . எனவே தூய்மையான வடிவில் விளங்கியவர் தூயவர் உறையும் விண்...