ஜெபக் கருத்துக்கள் - 4

ஜெபக் கருத்துக்கள் - 4
                                                                                -      விண்ணரசி ரத்னகுமார்

  • பொறுமையற்ற தன்மையை ஒப்புக் கொடுக்கிறோம்.
  • சுயப் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • பிறர் மீது இரக்கம் கொண்டு, ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும்.
  • நன்மை செய்யாத பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.
  • இரக்க செயல்கள் புரிய வேண்டும்.
  • தொண்டு புரிய வேண்டும். தொண்டு செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
  • இயலாமையை ஒப்புக் கொடுக்கிறோம்.
  • உலகத்திலுள்ள அனைத்து இறை ஊழியர்களையும் பரிசுத்த ஆவியால் நிரப்பியருளும். அவர்கள் அனைவரையும் இயேசுவின் திரு இருதயத்திற்கும் அன்னை மரியாவின் மாசற்ற திரு இருதயத்திற்கும் ஒப்புக் கொடுக்கிறோம்.
  • பலவீனத்தை ஒப்புக் கொடுக்கிறோம்.
  • போஜன பிரியத்தை ஒப்புக் கொடுக்கிறோம்.
  • பிறர் பெயரைக் கெடுக்கும் பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்
  • சாத்தானின் அந்தகாரம் சக்தியிலும், பில்லி சூனியக் கட்டுகளிலும் மாட்டுவதற்கு காரணமான பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்
  • உலக மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் மன்னித்து அன்பு செய்து ஏற்றுக் கொண்டு இரக்கம் வைத்து ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும்
  • கொரோனா தாக்குதலிலும் பயத்திலுமிருந்து விடுவித்தருளும்
  • நான் என்னும் அகங்காரத்தை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்
  • கேளிக்கைக்கு முதலிடம் கொடுக்கும் பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்
  • தற்பெருமையை உமது பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோம்
  • மரித்து போன பெற்றோர், தாத்தா பாட்டி, பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள், வாழ்க்கை துணை, in-laws, உற்றார் உறவினர்கள், நண்பர்கள், இரத்த உறவுகளின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒப்புக் கொடுக்கிறோம்
  • பிறரை வஞ்சித்து பறித்த பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்
  • பிறரை ஏமாற்றிய பாவத்திலும் சாபத்திலும் உள்மனக் காயங்களிலிருந்தும் விடுவித்தருளும்.


Comments

  1. தேவையான ஒப்புக்கொடுத்தல்கள். 75% ஆவது கடைபிடிக்க முயற்சி செய்கிறோம் ஆண்டவரே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்